Sunday, November 08, 2009
செகண்ட் ஹேன்ட் பொண்ணு வேண்டாம்!
பையன் பிசினஸ் விஷயமாக வேறே ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்பாவிடம் விவரமாகப் பேச நேரமில்லாததால்,
“இதுல எல்லாம் எழுதியிருக்கேன்” என்று ஒரு காகிதத்தைக் கொடுத்து விட்டு அவசரமாகப் புறப்பட்டான்.
பிரித்துப் பார்த்த சிவராமனுக்கு தலை சுற்றியது.
கலர் முக்கியம். கருப்பு வேண்டாம்.
கூடுமானவரை செகண்ட் ஹான்ட் வேண்டாம். ஒருக்கால் செகண்ட் ஹேண்டாக இருந்தால் போர் தேய்ந்திருக்கக் கூடாது.
இரண்டு ஹெட் லைட்டுகளும் பெரிதாகவும், முன்புறம் குவிந்தும் இருக்க வேண்டும். மத்தியில் கறுப்புப் பொட்டு ரொம்பப் பெரிதாக வேண்டாம்.
சீட்டுகள் பெரிதாக மெத்மெத்தென்று இருக்க வேண்டும். கிழிந்திருக்கக் கூடாது.
உட்புறம் பிண நாற்றம் அடிக்கக் கூடாது, மெல்லிய நறுமணம் இருந்தால் நல்லது.
யாராவது டெஸ்ட் டிரைவ் செய்து உட்புறத்தை அசுத்தப் படுத்தி இருக்கிறார்களா என்று சோதிக்க வேண்டும்.
ஒழுகுகிறதா என்று அடிப்பாகத்தைக் குனிந்து பார்த்து நிச்சயிக்க வேண்டும்.
மொபைலில் பையனைப் பிடித்த அவர், “என்னடா இதெல்லாம்?” என்றார் அதிர்ச்சியுடன்.
“சாரிப்பா, கார் ஒண்ணு வாங்கணும். நம்ம டிரைவர் கிட்டே குடுக்கிறதுக்காக வெச்சிருந்தேன். மாறிப் போச்சு”
உங்களால சிரிக்க
“ஒண்ணும் போடாமயா? பச்சைப் புளுகு. கூப்பிடு அந்தக் கழுதையை”
“என்ன புளுகு? நீங்க என்ன போட்டிருந்தீங்க?”
“காண்டம்”_________________________________________________________________________________“ஒரு அழகான பெண்ணோட ராத்திரி பூரா தனியா இருக்கச் சொன்னாலும் எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்”
“என் கசின் ஒருத்தனுக்கு இதே மாதிரி இருந்திச்சு. இப்ப குணமாயிடிச்சு”_________________________________________________________________________________“எங்க காலேஜிலே பாலியல் கல்வி சொல்லித் தரப் போறாங்க”
“பிராக்டிகல்ஸ் உண்டா?”
Wednesday, October 14, 2009
யோசிக்கட்டும் ஊடகங்கள்.
”பிடிபட்ட அப்பெண்ணுக்கும் ஒரு குடும்பம் இருக்கும்…அவருக்கு பள்ளிக்குச் செல்லும் மகனோ அல்லது மகளோ இருக்கக்கூடும்….. புகைப்படம் போட்டால் அவரது குடும்பமே துயரத்துக்கு உள்ளாகும்” என்கிற குறைந்தபட்ச மனிதநேயம் கூட இந்த நான்காவது தூணுக்கு இல்லாமல் போனது வெட்ககரமான விஷயம்.
நடிகர் ஜெமினி கணேசன் பலதார மணம் செய்தால் அவருக்குப் பெயர் காதல் மன்னன். அதே வேலையை ஜெயலட்சுமி செய்தால் வேறு பெயரா?
ஜெமினி செய்தால் தொலைக்காட்சியில் “ஸ்டாருடன் ஒரு நாள்” என ஒளிபரப்பாகும்……
அதையே ஜெயலட்சுமி செய்தால் “குற்றம் நடந்தது என்ன?” என்று ஒளிபரப்பாகும்……..
என்ன நீதி இது?
Thursday, September 03, 2009
கதவுக்குள்ள தெரிஞ்ச சிவப்பு நிறம் என்ன?
sms ஜோக்ஸ்
1)அப்பா:ஏண்டா டெஸ்ட்டுல சீரோ மார்க் வாங்கியிருக்க?பையன்:அது சீரோ இல்லப்பா, நா நல்லா படிக்கிறேன்னு டீச்சர் ஓ போட்டுருக்காங்க...
2)லைஃப் போர் அடிக்குதா?Type: 'I love'
3)ஒரு அரக்கன் ஒரு அரக்கியோட கோவிலுக்குப் போனான்.ஆனா, கோவில் கதவ ஓபன் பண்ண முடியல,ஏன்?ஏன்னா, அவன் அரை+கீ யோடதான போனான், முழு கீயோட போகல.
4)ஒரு பொண்ணு வண்டி ஓட்டுறத எப்படி டெக்னிக்கலா சொல்லுவாங்க?.....’பெண் ட்ரைவ்’னு சொல்லுவாங்க.
5)கசப்பான அனுபவங்கள் இல்லையென்றால்,இனிப்பான வாழ்க்கையை நாம் உணர முடியாது......அதனால,உடனே 2 பாவைக்காய் வாங்கி சாப்பிடுங்க.
6)அந்த மூன்று வார்த்தை,அம்மா சொன்ன வார்த்தையை விடப் பெரியது,காதலி சொன்ன வார்த்தையை விடப் பெரியது......நண்பன் என்னிடம் சொன்ன வார்த்தை,’மச்சி நானும் பெயில்’.
7)எறும்புக்கும், கொசுவுக்கும் கல்யாணம்.முதலிரவு அன்னைக்கி, கொசு வெளிய உக்காந்து வேடிக்க பாத்துட்டு இருக்கு.அப்போ, கொசுவோட நண்பன் கேக்குது, ‘என்னடா மாப்ள, முதலிரவும் அதுவுமா வெளிய உக்காந்து என்னடா பண்ற?’அதுக்கு மாப்ள கொசு சொல்லுச்சாம்,‘சிரிக்கி மவ, உள்ள குட்நைட் போட்டு தூங்குறாடா மச்சான்.’
8)இதப் படிக்கிறவங்க முட்டாள்,படிக்காதவங்க லூசு,சேவ் பண்ணி வச்சா கிறுக்கு,டெலிட் பண்ணா கொரங்கு,சிரிச்சா மெண்டல்,கோவப்பட்டா நாயி,எனக்கு திரும்ப அனுப்புனா எருமமாடு,எனக்கு கால் பண்ண நெனச்சா கழுதை,எதுவுமே பண்ணலன்னா தண்டம்,இப்ப என்ன பண்ணுவ? இப்ப என்ன பண்ணுவ?
9)கணவன்:எனக்கு ஆபரேசன்ல ஏதாவது ஆயிட்டா, நீ டாக்டர கல்யாணம் பண்ணிக்கோ.மனைவி:ஏன் இப்படி சொல்றீங்க?கணவன்:எனக்கு அவர பழிவாங்க வேற வழி தெரியல...
10)நீதிபதி:எதுக்குப்பா அவன் பொண்டாட்டிய 11 மணிக்கு மேல கூப்பிட்ட?நம்மாளு:அவந்தான் சார் சொன்னான், என் பொண்டாட்டிய 11 மணிக்கு மேல கூப்பிடா 10 பைசான்னு.
Friday, August 21, 2009
கந்தசாமி திரை விமர்சனம்
Thursday, August 20, 2009
Beauty of Mathematics !!!!!!!
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321
1 x 9 + 2 = 111
2 x 9 + 3 = 1111
23 x 9 + 4 = 11111
234 x 9 + 5 = 111111
2345 x 9 + 6 = 1111111
23456 x 9 + 7 = 11111111
234567 x 9 + 8 = 111111111
2345678 x 9 + 9 = 1111111111
23456789 x 9 +10= 1111111111
9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888
1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321
எதாவது சொல்லிட்டு போங்க
Wednesday, August 19, 2009
கடவுள் நம்பிக்கை
ஒரு அமாவாசை இரவு , ஒருத்தன் மலை உச்சியில் இருக்கும் கடவுளை பார்க்க சென்றான் . அப்பொழுது அவன் நண்பன் கேட்டான் "ஏன் பகலிலே போகக்கூடாதா?"
அதர்க்கு அவன் கடவுள் எனக்கு வழி காட்டுவார் என்றான்
ஒருவழியாக அவன் உச்சியை அடைந்துவிட்டான் அப்போது ஒரு கல் தடுக்கி கீழே விழுந்தான் . அது ஒரு பெரிய பள்ளம் , ஒவ்வொரு மரத்தின் மீதும் மோதி மோதி கீழே விலும்போது கடவுளே என்னை கப்பத்து என்று கத்தினான் ,
அப்பொழுது ஒரு மறக்கிலையை பிடித்து தொங்கிக்கொண்டே கடவுளை திட்டினான் . அப்போது கடவுள் அவனிடம் கிளையை விட்டுவிடு நான் கப்பத்துறேன் என்றார் . சுத்தி சுத்தி பத்தான் , ஒரே இருட்டு .
அவன் கடவுளை நம்ப தயாரா இல்லை . கிளையை விடாமல் விடிய விடிய தொங்கிக்கொண்டே இருந்தான் .
ஒருவழியா விடிந்தது , கீழே பார்த்தவனுக்கு பயங்கர அதிர்ச்சி ,
அவன் காலுக்கும் கீழ அரையடி துரத்தில் தரை இருந்துச்சாம் .
என்ன கொடும சார் இது
ஒரு பெரிய குடும்பம் . ரொம்பநாளா அந்த குடும்பத்துல பெண் வாரிசே இல்ல (அஞ்சாறு தளமுரையன்னு வச்சுக்குங்களே) . ஒரு நாள் அவங்க வீட்ல ஒரு பெண் குழந்தை பிறந்தது . எல்லோரும் போயி குழந்தைய பார்த்தாங்க .
அப்பிடி பார்த்துட்டு வந்த ஒருத்தர்ட்ட ஒரு அம்மா கேட்டுச்சு "குழந்தை யார் ஜாடையா இருக்கு"
அப்ப வந்தவரு சொன்னாரு அத யாரு பார்த்ததுனு
என்ன கொடும சார் இது .
Monday, August 17, 2009
கிசுகிசு .......
செட்களில் அருந்ததீயைப் பார்ப்பவர்கள் அரண்டு போய் விடுகின்றனராம். காரணம், கையில் தம்மும், வாயில் புகையுமாகத்தான் காணப்படுகிறாராம்.அடுத்தடுத்து பற்ற வைத்துக் கொண்டே இருக்கிறாராம். ஏன் இப்படி என்று கேட்டால், உடம்பைக் குறைக்கத்தான் என்கிறாராம்.இது உடம்பை உருக்குமே என்று குழப்பமாகி நின்றால், புகை பிடித்துக் கொண்டே இருந்தால் வயிறு மப்பாகி தொம் என்று இருக்கும். பசிக்காது. பசித்தால்தானே நாம் நிறைய சாப்பிட்டு உடம்பு பெறுக்கிறது. அதைத் தவிர்க்கத்தான் இப்படி ஒரு டிரிக் என்கிறாராம் வாயிலிருந்து சுருள் விட்டபடி..என்னா மாதிரியான சயின்டிபிக் திங்கிங்..!
===================================================================
ரம்லத்தை நேரில் சந்தித்த நயன்தாரா தன்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், விவாகரத்து போன்ற முடிவுக்கு அவசியமின்றி இருவரும் இணைந்து பிரபுதேவாவுடன் வாழலாம் என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது.வேறு வழியின்றி இந்த முடிவை அமைதியுடன் கேட்டுக் கொண்டாராம் ரம்லத். இந்த மவுனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்ட பிறகே பிரபுதேவாவை தன் துபாயிலிருக்கும் தன் அண்ணனிடம் அறிமுகப்படுத்தினாராம் நயன்.சமீபத்தில் ஒரு ஆங்கில இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் இதை ஒப்புக் கொண்டுள்ள நயன்தாரா, திருமணம் எப்போது அல்லது ஏற்கெனவே முடிந்துவிட்டதா என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் மழுப்பியுள்ளார். ஆனால் நிச்சயம் அனைவரையும் அழைத்து வெளிப்படையாக திருமணத்தை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் நயன்.ஆக... செட்டில்மெண்ட் ஆகிடுச்சின்னு சொல்லுங்க!
==============================================================
Wednesday, August 05, 2009
ஒரு கன்னத்தில் ..............
ஒருவன் உங்கள் மீது கல்லை எறிந்தால்,
அவன் மீது பூவை எறியுங்கள்,
இறையன்பை உணரட்டும்!
அவன் மறுபடியும் கல்லை எறிந்தால்
இந்த முறை பூ ஜாடியையே எறியுங்கள்
ங்கொய்யால சாகட்டும்!
Friday, May 08, 2009
அப்பாலே போ சாத்தானே
அவசர அவசரமாக ரேஷன் கடையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவனைப் பிடித்து நிறுத்தி கையில் ஒரு நோட்டீசைத் திணித்தார் ஒரு ஆசாமி.
இருந்த அவசரத்தில் படிக்காமலேயே….என்ன? என்றேன்.
“கர்த்தராகிய இயேசு மீண்டும் வருகிறார் சகோதரா” என்றார்.
நான் ரேஷன் வாங்கிய பிறகா…இல்லை அதற்கு முன்னமேவா? என்றேன்.
“அதற்கு முன்னால் நீங்கள் தேவ ஊழியர்களின் கைகளால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்.” என்றார்.
நான் ஸ்நானமே வாரத்துக்கு ஒரு தடவைதான்….அதென்ன ஞானம்? என்றேன்.
“அதற்குப் பிறகு நீங்கள் ஜீவியம்….தெய்வீக சுகத்துக்குக் கீழ்படிந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் மறுபடியும்.
சாதாரண சுகத்துக்கே கீழ்படிபவன்….தெய்வீக சுகம்ன்னா சும்மாவா இருக்கப் போறேன்? சீக்கரம் மேட்டருக்கு வாங்க என்றேன்.
அப்படியே இயேசு வந்தாலும் ஏழு வருட காலம் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பாராம்…அப்போது இன்னொரு டூப்ளிகேட் இயேசு மீசைக்கு மேலே ஒரு மச்ச அடையாளத்தோடு பயங்கர ஆட்சி நடத்துவாராம். ஏழு முடிந்த பிறகு இயேசுவின் ஏழரை அடச்சே….ஆயிரம் வருட ஆட்சி நடக்குமாம்….
அப்புறம் ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெற்ற என்னைப் போன்ற “பரிசுத்தவான்கள்” த்ரிஷா, பாவ்னா போன்ற தேவதைகளோடு சூப்பரான வாசஸ்தலங்களுக்கும்….
உங்களைப் போன்ற ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெறாதவர்கள் சுப்ரமண்யசாமி போன்றவர்களோடு அக்கினிக் கடலுக்கும் போவீர்களாம்….
உளறிக்கொண்டே போனது அது……
அது சரி நீங்க எந்த டாக்டர் கிட்ட டிரீட்மெண்ட் எடுத்துக்கறீங்க? என்றேன் சன்னமாக.
“அப்பாலே போ சாத்தானே” என்றபடி கையில் எதையோ அடிக்க எடுக்க..
உடு ஜூட் என்றபடி பின்னங்கால் பிடறியில் பட ரேஷன் கடை நோக்கிப் பறந்தேன்.
Thursday, April 02, 2009
Thursday, March 12, 2009
இனியவளே!
இல்லாத கடவுள் போல
பொல்லாத இதயம் கொண்ட
தோழியே!
என் மீது காதல்
உண்டென்றால் உண்டு!
இல்லையென்றால் இல்லை!
என்பதை மட்டும் சொல்;
இரவு வெறுக்கும் சூரியனாக,
பனி வெறுக்கும் வெயிலாக,
என்னை வெறுத்து விடாதே!
உன் நினைவை
சுமந்த படி
துடிக்கும் இதயத்திற்கு
நிரந்தர விடுமுறை அளிக்காதே!
ஒரே சமயத்தில்
என்னை
மனிதனாகவும், பைத்தியமாகவும்
மாற்றியவளே!
என் காதலை அழிக்காதே....!
எனக்குள் நானே
புன்னகைக்கும் போதெல்லாம்–என்னுள்
புதுரத்தம் பாய்கிறது
உண்மையைச் சொல்
செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது
சிரிப்பதற்கா? அல்லதெனைச்
சிலிர்ப்பூட்டுவதற்கா?
தினமும் எழுந்து
சிந்திக்கிறேன் பெண்ணே –உன்
சிரிப்புக்குவமைகளை
கடைசியில் என்னையே நான்
நிந்தித்துக்கொள்கிறேன்
வராத வார்த்தைகளுக்காய்!
நிட்சயமாய்ச் சொல்வேன்
நீதானெனக்குச்
சிரிக்கக் கற்றுக்கொடுத்தவள் –என்
வாழ்வின் மனஇறுக்கங்களால்
தோன்றிய வேதனைகளுக்கு நீ
மரண தேவதை!
அதுவோர் காலங் கண்ணே
எல்லோருக்கும் விடிந்திருக்கும் நான் மட்டும்
இருட்டில் நடந்து கொண்டிருப்பேன் உன்
புன்னகைப் பொற்கரங்கள்
என்னிமைகளைத் தட்டித்திறக்காதவரை
நினைத்துப் பார்க்கிறேன்-நாம்
பேசிக்கொண்டதைவிட
பிரியமாகச் சிரித்துக்கொண்ட
பொழுதுகள் ஏராளம்-ஒருவேளை
முறைத்துக் கொண்டால்கூட
அதுயார் முதலில்
சிரித்துக்கொள்வதென்பதற்காகவே
இருந்திருக்கும்!
விலகிப் போனபின்னும்
நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன் என்
சின்ன இதயத்தில் என்றாவதொருநாள் நினைத்து
எனக்குள் நானே சிரித்துக் கொள்வதற்காய்!
நிலவு
ஆணாக மாறிவிடு,
விரல் கோர்த்து நடந்ததுண்டு.
உனக்காக நானும்,
எனக்காக நீயும்
எத்தனையோ முறை
இறைவனை தொழுததுண்டு.
சேர்ந்து சிரிப்பது மட்டுமல்ல
சேர்ந்து அழுவதும் நட்பு தான்
என எனக்குணர்த்திய
தோழியே!!!
நீ
ஆணாக மாறிவிடு,
சமுதாயத்தின் சந்தேகப்
பார்வையில் இருந்து
நாம் விடுபடலாம்.
புவி ஈர்ப்பு விசை
சுவாசிக்காமல்..........
பேசி விடுகிறேன்
எப்போது வாய்க்கும்
உனக்கும் எனக்குமான
அந்த இனிய பொழுதுகள்.......!
நான் பேச எத்தனிக்கும்
எல்லா நேரங்களிலும்
நீ யாரிடமோ பேசியபடி.......!
உன்னோடான என் பேச்சு
எப்போது துவங்கும் என்றே தெரியாத போது
"அப்புறம்"
என்றபடி நீ பேச்சை நிறுத்துவாய்......!
ஆரம்பப் புள்ளியையே
நான் தேடிக்கொண்டிருக்க
நீ அதையே முற்றுப்புள்ளியாய்
முடிக்கப் பார்க்கிறாய்.......
பேசுகிறேனே கொஞ்சம்.......
வினாடி நேரமாவது
என்னை விழிகள் விரிய பாரேன்...!
பேசி விடுகிறேன்
என் கண்களால் மட்டுமாவது..........
எனக்குள் தேம்புகிறது
கடந்தகால நினைவு
ஸ்நேகிதியே
எங்கோ ஓர்
பௌர்ணமி நாளில்
தூங்காத இரவுகளில்
நீங்காத நினைவுகளாய்
என்னுடன் உறவாடும்
நம் ஸ்நேகம்
முதலில் பார்த்தும்
மலராய் சிரித்ததும்
அப்போது
இன்பச்சாரலை
அள்ளி வீசினாலும்....
பின்னாளில் வரும்
இடிமழையாய்
நம் பிரிவை
அந்நாளில் நாம்
உணரவே இல்லை
பிரிவெனும் பேரிடி
தாக்கிடும் என்று
தெரிந்திருந்தும்
மலை எதிர்க்கும்
மலர்களாய் நாம்
மனங்கிறங்கி லயித்திருந்தோம்
பாட வேளையில்
பகிர்ந்து கொண்ட
பசுமை நினைவுகள்
இன்னும் என்னுள்
இறந்து விடாமல் ... என்னை
உறங்கவும் விடாமல்
விளையாட்டு பேச்சும்
விஷமக் குறும்பும்
இன்றும் எதிரொலியாய்
இங்கும் ஒலிக்குதடி
கொத்திப் பசியாற்றும்
மரங்கொத்திப் பறவையாய்
என் மனங்கொத்தித் தின்னும்
சிநேகப் பறவையடி நீ...!
எங்கோ ஓர்
இருண்ட இருளில் இரையும்
சுவர்க்கோழி போல்
இம்சிக்கிறது ...நம்
கடந்தகால நினைவு
நீயுதிர்த்த வார்த்தைத் துளியில்
நிறைவுபெற்ற
நீர்நிலையாய் நம் நட்பு
அதில் நீந்திக் களிக்கிறது
என் நினைவு
மறவாதே என்றாயே
என் மனம
உன் நினைவுப் பச்சைகளை
அல்லவா
சுமந்து கொண்டிருக்கிறது ..
“என்னவள்”
நான் பிறந்ததே
விழி பேசும் மொழி
விளை நிலம்
அவள் உருவத்தை
எனதருமை காதலியே
Monday, February 23, 2009
நீ என் இதயத்தில்
விழிகுளம்
சுகமான சுமை
நீ எங்கிருந்தாலும்
என் மனதில்
நித்தம் நித்தம்உன்னை பற்றிய கனவுகள்தான்
சுகமான சுமையாக
கனவாக அல்ல
நினைவுகள் ஒவ்வொரு நாளும்
என் கண்களுக்கு வந்து
கொண்டுதான் இருக்கின்றன
கனவாக அல்ல
கண்ணீராக.......