Thursday, March 12, 2009

இனியவளே!


இனியவளே!
இல்லாத கடவுள் போல
பொல்லாத இதயம் கொண்ட
தோழியே!
என் மீது காதல்
உண்டென்றால் உண்டு!
இல்லையென்றால் இல்லை!
என்பதை மட்டும் சொல்;
இரவு வெறுக்கும் சூரியனாக,
பனி வெறுக்கும் வெயிலாக,
என்னை வெறுத்து விடாதே!
உன் நினைவை
சுமந்த படி
துடிக்கும் இதயத்திற்கு
நிரந்தர விடுமுறை அளிக்காதே!
ஒரே சமயத்தில்
என்னை
மனிதனாகவும், பைத்தியமாகவும்
மாற்றியவளே!
என் காதலை அழிக்காதே....!

No comments:

Post a Comment