Thursday, March 12, 2009

பேசி விடுகிறேன்


எப்போது வாய்க்கும்
உனக்கும் எனக்குமான
அந்த இனிய பொழுதுகள்.......!
நான் பேச எத்தனிக்கும்
எல்லா நேரங்களிலும்
நீ யாரிடமோ பேசியபடி.......!
உன்னோடான என் பேச்சு
எப்போது துவங்கும் என்றே தெரியாத போது
"அப்புறம்"
என்றபடி நீ பேச்சை நிறுத்துவாய்......!
ஆரம்பப் புள்ளியையே
நான் தேடிக்கொண்டிருக்க
நீ அதையே முற்றுப்புள்ளியாய்
முடிக்கப் பார்க்கிறாய்.......
பேசுகிறேனே கொஞ்சம்.......
வினாடி நேரமாவது
என்னை விழிகள் விரிய பாரேன்...!
பேசி விடுகிறேன்
என் கண்களால் மட்டுமாவது..........

No comments:

Post a Comment