Tuesday, December 28, 2010
Monday, December 27, 2010
அந்நியன்
"halloo யாரு அம்பியா?"
"யோவ், நான் அம்பி இல்லை; அந்நியன்!"
"வணக்கம் அந்நியன் சார்! நல்லாயிருக்கீங்களா? சதா சௌக்கியமா இருக்காங்களா?"
"ஹலோ, நீங்க யாரு பேசறீங்க? உங்களுக்கு என்ன வேணும்?"
"என் பேரு கொப்பம்பட்டி கோவாலு! நமக்குத் தெரிஞ்ச ஒருத்தரு லஞ்சம் வாங்கிட்டாரு! அதான் தகவல் தெரிவிக்கலாமுன்னு கூப்புட்டேன்."
"என்னது, லஞ்சம் வாங்கிட்டாரா? என்னய்யா, என்னவோ புதுவருச காலண்டர் வாங்கிட்டாருங்கிற மாதிரி சாதாரணமா சொல்றே?"
"இப்போ லஞ்சம் வாங்குறதெல்லாம் சர்வசாதாரணம் தானுங்களே! அது போகட்டும், அஞ்சு பைசா திருடினா குத்தமா அந்நியன் சார்?"
"திஸ் இஸ் டூ மச்! என்னோட "பிட்"டை என்கிட்டேயே போடறீங்களா? அஞ்சு பைசா திருடினாலும் தப்புத்தான். அஞ்சு கோடி பேரு அஞ்சு பைசாவை...."
"ஸ்தூ! ஸ்தூ!! ரொம்ப நீளமான டயலாக்கெல்லாம் கேட்க முடியாது. செல்போனை டாப்-அப் பண்ண மறந்திட்டேன். தப்பா இல்லையா?"
"பெரிய தப்பு! கருட புராணப்படி அந்தாளுக்கு தண்டனை கொடுக்க வேண்டியது தான். அவரு அட்ரஸைச் சொல்லுங்க!"
"எழுதிக்கோங்க! கொப்பம்பட்டி கோவாலு, கேர் ஆஃப் கோவிந்தா, டுபாக்கூர் பை-பாஸ் ரோடு, கொப்பம்பட்டி! பஸ் நம்பர் 420-ஐப் புடிச்சா எங்க வீட்டுலே தான் வந்து முட்டும்!"
"என்ன கோவாலு? உங்க அட்ரஸையே சொல்லுறீங்க?"
"லஞ்சம் வாங்கினதே நான் தான்! என் அட்ரஸைக் கொடுக்காம வேறே ஏதோ டில்லி அட்ரஸையா கொடுக்க முடியும்?"
"நீங்களே லஞ்சம் வாங்கிட்டு நீங்களே என்கிட்டே புகார் கொடுக்கறீங்க? மனசாட்சி உறுத்திடுச்சா?"
"யோவ் அந்நியன்! என்னை என்ன மத்திய ஊழல் கண்காணிப்பு தடுப்பு ஆணையர்னு நினைச்சுக்கிட்டியா? பண்ணின தப்புக்கு சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு மனசாட்சி தெளிவாயிருக்குன்னு புளுகுறதுக்கு?? நான் சோறு திங்கிறேன் சாமி! இப்போ கருடபுராணத்துலே சொல்லியிருக்கிறா மாதிரி தண்டனை கொடுப்பியா மாட்டியா?"
"என்னய்யா இது? நீ லஞ்சம் வாங்கிட்டு என்னை மிரட்டறே?"
"இப்பல்லாம் லஞ்சம் வாங்குறவன் மிரட்டறதுதானய்யா லேட்டஸ்ட் ஃபேஷன்! சொல்லு, நான் சொன்ன அட்ரஸுக்கு வந்து தண்டனை கொடுப்பியா? வரதுக்கு முன்னாடி ஒரு மிஸ்டு கால் கொடு! நான் வாசல்லே வந்து நிக்கிறேன்!"
"என்னய்யா குழப்பறே? இது லஞ்சக்கேசுலே மாட்டுனவங்களை ஒரு பதவியிலேருந்து தூக்கி இன்னொரு பதவியிலே உட்கார வைக்கிற சீசனாச்சே? எதுக்கு வலிய வந்து மாட்டிக்கிறே?"
"என்னய்யா நீ? நம்ம நாட்டு சி.பி.ஐ.மாதிரி சும்மா கேள்வி மேலே கேள்வி கேக்குறியே தவிர ஒண்ணும் பண்ண மாட்டேங்குறியே? எனக்கென்னவோ உன் மேலேயே டவுட்டாயிருக்குது! சொல்லுய்யா, நீயும் மாமன் மச்சான் பேருலே கம்பனி தொடங்கி கருப்புப்பணத்தை வெள்ளோட்டம் விட்டிருக்கியா?"
"மிஸ்டர் கோவாலு! மரியாதையா பேசு! இல்லாட்டி உனக்கு என்ன தண்டனை தெரியுமா? பரிபாதனம்!"
"பரிபாதனமா? அப்படீன்னா?"
"எரிமலைக்குழம்பைக் குடிக்கிற தண்டனை!"
"அடப்போய்யா, நான் என் பொஞ்சாதி பண்ணுற வெந்தயக்கொழம்பையே சாப்பிட்டவன். ஏதோ பெரிய தண்டனை கொடுப்பேன்னு பார்த்தா, காமெடி பண்ணிக்கிட்டு...!"
"கோவாலு! நான் கொடுக்கிற தண்டனையைக் கிண்டல் பண்ணாதீங்க! ’அந்நியன்’ படம் பார்த்தீங்களா இல்லியா?"
"பார்த்தேன்! பார்த்தேன்! எதுக்கும் ஒரு வாட்டி திருப்பிச் சொல்லேன். மொத்தம் எவ்வளவு தண்டனை? எத்தனை அயிட்டம் இருக்கு?"
"அயிட்டமா? யோவ், இதென்ன செட்டிநாடு ரெஸ்டாரண்டா? விட்டா இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷல் உண்டான்னு கேட்பே போலிருக்கே?"
"கோவிச்சுக்காம சொல்லுய்யா!"
"அந்தகூபம்-அதாவது இருட்டுக்குகையிலே தள்ளி எருமை மாடுங்களை விட்டு மிதிக்கிறது!"
"சரிதான், லாக்-அப்புலே போலீஸ்காரங்க மிதிக்கிறா மாதிரி...!"
"அடுத்தது கிருமிபோஜனம்! இரத்தம் உறிஞ்சுற அட்டைகளால உடம்பு முழுக்கக் கடிக்க விடறது...!"
"ஓஹோ! நாங்க வாங்குற லஞ்சத்துலே கீழேயிருந்து மேலே வரைக்கும் பர்சன்டேஜுன்னு எல்லாரும் உறிஞ்சி எடுக்கிறா மாதிரி...!"
"கும்பீபாகம்! எண்ணையிலே போட்டு வறுத்தெடுக்கிறது!"
"இது ஞாபகமிருக்கு! பாருங்க அந்நியன்! என்னையும் இதே மாதிரி வறுக்கிறதா இருந்தா, அதிகம் மிளகாய் சேர்க்காதீங்க. ஏன்னா எனக்கு அல்சர். காரம் ஒத்துக்காது!"
"யோவ், உன்னைத்தான் வறுக்கவே போறேன்!"
"இப்போ மட்டும் என்ன வாழுதாம்? வாங்கினா ஜனங்க வறுத்தெடுக்கிறாங்க; வாங்கலேன்னா மேலதிகாரிங்க வறுத்தெடுக்கிறாங்க! மொத்தத்துலே வறுபடுறது என்னவோ நிச்சயம்!"
"அடுத்தது தாமிஸ்ரம்! மண்டையிலே குண்டாந்தடியாலே அடிக்கிறது!"
"ஊஹும்! புதுசா ஏதாவது சொல்லு! இதுதான் வீட்டுலே தினப்படி நடக்குதே!"
"என்னய்யா இது? கொஞ்சம் கூட பயப்படவே மாட்டேங்குறியே!"
"அந்நியன்! உன்னோட தண்டனையெல்லாம் படத்துலே பார்க்க சவுண்டு எஃபெக்டோட நல்லாயிருந்திச்சு! கேட்கும்போது பயமே வரமாட்டேங்குது! இருக்கிறதுலேயே நல்ல தண்டனையாப் பார்த்து செலக்ட் பண்ணி சாயங்காலத்துக்குள்ளே ஒரு எஸ்.எம்.எஸ்.அனுப்பு! ஓ.கேவா?"
"எஸ்.எம்.எஸ்.அனுப்பவா? கோவாலு சார்! என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?"
"அட இல்லைய்யா, நம்பு!"
"பேசாம நீங்க போலீஸ்லே போய் சரண்டர் ஆயிருக்கலாமே? அவங்க பார்த்து உங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருப்பாங்களே? எதுக்கு என் உசிரை எடுக்கறீங்க?"
"போலீஸா? என்ன விளையாடுறியா? நான் வாங்கியிருக்கிற நூறு ரூபாய் லஞ்சத்துக்கெல்லாம் போலீஸுக்குப் போறதா? லஞ்சமுன்னா ஒரு மரியாதை வேண்டாம்? ஏதோ லட்சக்கணக்குலே, கோடிக்கணக்குலே இருந்தா, கோர்ட், கேஸு, விசாரணைக்கமிசன்னு போறதிலே ஒரு நியாயமிருக்கு!"
"அடப்பாவிகளா!"
"அப்படியே கேஸ் போட்டா மட்டும் என்னாயிரும்? உதாரணத்துக்கு தமிழ்நாட்டுலே கூத்தபெருமாளுன்னு ஒருத்தரு அம்பது ரூபாய் லஞ்சம் வாங்கினாரு! பதினேழு வருசம் கேஸ் நடந்து இப்போத்தான் சுப்ரீம் கோர்ட்டுலே ஒரு வருஷம் ஜெயிலுன்னு தீர்ப்பாயிருக்கு! பதினோரு வருசமா சம்பளமும் கிடையாது; கிம்பளமும் கிடையாது! சோத்துக்கு என்னய்யா பண்ணுவான் ஒரு மனிசன்? அம்பது ரூபாய்க்கு பதினேழு வருசமுன்னா, நான் நூறு ரூபாய் வாங்கியிருக்கேன். எனக்கு முப்பத்தி நாலு வருசமா?"
"கோவாலு????"
"அதுனாலே தான், இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு உனக்கு போன் பண்ணினேன். மரியாதையா சட்டுப்புட்டுன்னு வந்து தண்டனை கொடுத்துரு! இல்லாட்டி, சாகுறதுக்கு வேறே வழியா இல்லே எனக்கு? ஏதோ ’காவலன்’ படம் பொங்கலுக்குத்தான் வருதுன்னு சொன்னாங்களென்னுதான் உன்னைக் கூப்பிட்டேன். நீ வந்தா வா; வராட்டிப்போ!"
Wednesday, October 13, 2010
சிந்து
சிந்துவுக்கு ரொம்ப தங்கமான மனசு ( நெசமாத்தான் ) எந்த சந்தேகம்னாலும் உண்டனே க்ளீயர் செஞ்சா.நமக்குத்தான் டவுட்டே வராதே. ஏதாச்சும் தெரிஞ்சாதானே ! எல்லாரும் Flow Chart வச்சுகிட்டு அல்லாடிகிட்டு இருந்தா நான் சிந்துவொட Flow லேப்பில் எங்க இருக்குன்னு அல்லாடிக்கிட்டு இருந்தேன். இப்படியே விட்டா சரிப்படாது. ஏதாச்சும் ‘டவுட்டு’ ன்னாதானே சிந்து கிட்டே பேசமுடியும். கஷ்டப்பட்டு ஒருவாரம் ப்ரோக்ராம் கத்துகிட்டு சிந்து கிட்டே கேட்கறதுக்காக வண்டி வண்டியா டவுடோடே போனேன்.நான் கேட்ட வரலாற்று சிறப்பு மிக்க டவுட்டுகளைக் கேட்ட சிந்து இரண்டே வரிகளில் பதில் சொல்லித் தீர்த்துவிட்டு போனாள். ‘ ச்சே! என்ன இது ஒரு வாரம் ப்ரிபேர் பண்ணுனது வேஸ்ட் ஆகிபோச்சே! எப்போடா கம்ப்யூட்டர் லேப் வரும்ன்னு பசங்க எல்லாரும் தவம் இருக்க ஆரம்பிச்சிட்டோம். கம்ப்யூட்ட்ர் லேப்புன்னாலே காத தூரம் ஓடுர பசங்க கூட லேப் 2 மணிக்கின்னா 1 மணிக்கே போய் உட்கார ஆரம்பிச்சிட்டாணுங்க!“ மாப்ளே இப்படியெல்லாம் சப்பைத்தனமா சந்தேகம் கேட்டா எப்படி? சும்மா நச்சுன்னு அவ பதிலே சொல்ல முடியாத மாதிரி டவுட் கேளுடா. நீ கேட்கற கேள்விலயே உன் முகம் சும்மா பச்சக்குன்னு ஒட்டிக்கணும் ! அப்படியொரு டவுட் எடுத்து வுடுடா !! “ என் நலம் விரும்பி தோழன் துரைசிங்கம் சொன்னதையே வேத வாக்காகக் கொண்டு சந்தேகத்தை தேடி ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையில் இதுவரை எட்டிப்பார்த்திராத கல்லூரி லைப்ரரி வரை ஓடினேன்.
ஒருவழியாக சிலபல டவுட்டுகளை வெற்றிகரமாக கண்டுபிடித்தேன்.ஒகே அடுத்தது action தான் ! மத்தியானம் பசங்க எல்லாம் லேப்புக்கு போக ஆரம்பிச்சானுங்க. ‘டேய் துரை அப்படியே போய்கிட்டு இரு நான் பாத்ரூம் போய்ட்டு வாரேன் என்ன ? ‘ ‘சீக்கிரம் வாடான்னு’ சொல்லிட்டு ஓடினான். எல்லாரோடையும் போனா பத்தோடு பதினொன்னு! கொஞ்சம் லேட்டா போனாத்தான் நநன் லேட்டஸ்டா தெரிவேன். என் ஐடியாவை நினைத்து நானே என்னை பாராட்டித் தள்ளினேன்.எல்லாரும் போய்ட்டானுங்க போல ! ஒரு பயலையும் வழியிலே காணோம்.இதோ லேப் தெரிகிறது. லேப்டாப் போல சிக்கென்று என் சிந்து. என்னை கவனித்துவிட்டாள் !! என்னப் பார்த்ததுமே அவள் முகத்தில் ஒரு இனம் புரியாத உணர்ச்சி. “ கமான் பாண்டி ஒர்க் அவுட் ஆகிடும் போல இருக்கே !! “ நேரா அவள் டேபிளுக்கே போய் டவுட் கேட்டுற வேண்டியதுதான். பசங்க எல்லாம் ஏதோ பில்கேட்ஸுக்கே கோடிங் கத்துத்ர்ற ரேஞ்சுல எதையோ தட்டிகிட்டு இருந்தானுக.என்னையவே பார்த்துகிட்டு இருக்காளே !! எங்கோ மனம் பறந்தது. அருகில் சென்றவுடன் சிந்துவின் பார்வையில் ஒரு தவிப்பு. நான் என் சந்தேகங்களை எடுத்து விட ஆரம்பித்தேன். சிந்து ஏதோ என்னிடம் சொல்ல வந்த மாதிரி தெரிந்தது. விடலையே ! இப்போதே முழுசையும் கேட்டுடணும் இல்லேண்ணா எனக்கு மறந்து போச்சின்னா?? ஒருவழியாக கேட்டு முடித்துவிட்டு சிந்துவைப் பார்த்தேன்.யெஸ் அவள் முகத்தில் குழப்பம். இதைத்தான் எதிர் பார்த்தேன். தெரியலைன்னு சொல்லப் போறா இல்லை ரெபர் பண்ணிட்டு சொல்றென்னு சொல்லப் போறா !! எம் முகத்தில் பெருமிதம் ததும்பி வழிந்தது. “நான் ஒன்னு சொன்னா தப்பா நெனச்சிக்க மாட்டீங்களே?” “ நோ நோ மேம்! “ நீங்க உங்க பேண்ட் ஸிப்பை போடலைன்னு நெனைக்கிறேன் ! “ ஆயிரம் போக்ராண் குண்டு என் மனதில் . என் கண்முன்னே என் மானம் ஸிப் வழியாக போய்டுச்சே!! டேய் என் முகம் கண்டிப்பா அவளுக்கு நெனப்புல வரும் ஆனா அது நான் கேட்ட கேள்வியினால இல்லே !!! யாராச்சும் ஒரு நாலு முழக் கயிரு கொடுங்கப்பூ அப்படியே தொங்கலாம் போல இருக்கே !!! இதப்போயி எப்படி மறந்தேன் ! இப்போ நெனச்சாலும் காலெல்லாம் நடுங்குது !
Tuesday, October 12, 2010
‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க
பப்பாயா தாய் சாலேட்
இதையெல்லாம் சட்டீல உட்டு நல்லா ஒரு ஆட்டு ஆட்டுங்க.ஒரே நிமிசத்துல ரெடி….நம்ம பப்பாயா தாய் சாலேட்…..
ஹலோ…என்ன சொல்ல சொல்ல சட்டையப் புடிக்கிறீங்க…?என்ன ரேஷன் அரிசிக்கே திண்டாட்டமா?ஊகூம்…இதெல்லாம் ரேஷன்ல போட மாட்டாங்க….என்ன மூடணுமா?
ஐய்யய்யோ இதெல்லாம் நான் சொல்லுலீங்க. நாம எப்படி சோறு சாப்புடறதுன்னு டீ.வீ.ல சொல்லிக் குடுத்தத திருப்பிச் சொன்னேன்… அவ்வளவுதான்….
தாயோ தகப்பனோ ஊட்டுல தறுதலையா இருந்தா, நாமெல்லாம் இப்புடி பப்பாயா தாய் சாலேட்டோ…தகப்பன் சாலேட்டோ சாப்பிட வேண்டீதுதான்.
--------------------------------------------------------------------------------------------------
ஆடத் தெரியாத எவரோ மேடை சரியில்லை….ன்னாராமா. அப்படி இந்த பயாலஜி, சோஷியாலஜி மாதிரி நியூமராலஜி…நேமாலஜி…வந்தாலும் வந்தது…பலருக்குக் கிறுக்கு மண்டைக்கு ஏறிவிட்டது.அடங்கப்பா பேரை மாத்தறேன்….ஸ்பெல்லிங்க மாத்தறேன்னு சொல்லி இன்ஷியல என்னாவது மாத்தீராதீங்கப்பா. குடும்பத்துக்குள்ள கொழப்பம் என்னாவது ஏற்பட்டறப் போகுது.
ஜொள்ளுவுடுறது எப்படி
அடுத்த வகையறா எப்படீன்னா உங்க ஆபீஸிலேயே இருக்கற அல்லு சில்லு கெளப்புற பொண்ணுங்க.. இவுக பேசறப்போ பார்த்தீகன்னா அப்படியே ஏதோ இப்போத்தான் UKG ல இருந்து அள்ளிகிட்டு வந்து ஆபீஸ்ல வுட்ட மாதிரி கொஞ்சி கொஞ்சி மழலைத்தமிழ் பேசி உங்க நெஞ்சை கொள்ளை அடிப்பாக. இவுக கிட்டே பேசறப்போ உங்களை அறியாமலே வாயில இருந்து ஜலம் வழிய ஆரம்பிச்சுடும்.. உங்களால உணரவே முடியாதுங்க.. உங்களுக்கு என்னவோ நீங்க ஸ்டடியா பேசிகிட்டு இருக்கற மாதிரிதான் தெரியும் ஆனா உங்ககூட வேலை செய்யுற சக normal அம்மணீஸ் முகத்தைப் பார்த்தே நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கற climatic conditions ஐ மோப்பம் பிடிக்கலாம்.. இந்த வகை ஆளுக கிட்டே நீங்க பேசறப்போ கொஞ்சம் நிதானமா மத்தவங்களுக்கு அதிகம் கேட்காத மாதிரி பேசுங்கப்பூ.. பேசற விசயம் ‘சப்பை’ மேட்டரா இருந்தாக் கூட ‘ என்ன காந்திய சுட்டுட்டாங்களா..? “ ங்கற மாதிரி மூஞ்சில ஒரு RED ரியாக்சனை வச்சுகிட்டு பேசுனீங்கன்னா ஏதோ நீங்க ரெண்டு பேரும் project delivery பத்தி deep டிஸ்கசன்ல இருக்கறதா நெனச்சுக்குவாக ... ஒகேவா.?
சில சமயம் எசகு பிசகா உங்க சம்சாரம் கூடவோ இல்லை சம்சாரம் ஆகப்போற அம்மணிக கூடவோ அவுகளுக்கு துணியோ இல்லை கழுத்துல காதுல போட்டுக்கற மணியோ வாங்க போறப்போ அங்கன வாங்க வர்ற சக அம்மணீஸ் சிலபேரு உங்க நாக்கோட நீளத்தை இஞ்ச் டேப் வைக்காக கொறறயா சோதிப்பாக. கொஞ்சம் ஏமாந்து நீங்க அவுக அழகுலே லயிச்சு லேசா லோகத்தை மறந்தீங்கன்னு வைங்க... அந்த சமயத்திலே உங்க அம்மணி எசகுபிசக்கா நீங்க பார்க்கிறதை பார்த்துட்டாகன்னு வைங்க அவ்ளோ தான் .. உங்க இமேஜ் சொல்லாம கொள்ளாம ' பப்பரக்கா' னு டேமேஜ் தான்.. இந்த மாதிரி சமயத்திலேதான் நீங்க " கொல கொலயா முந்திரிகா " formula வை follow பண்ணனும். எப்படீன்னா.. உங்க அம்மணிகிட்டே எடுக்கற பொருளும் நீங்க பார்க்கற பிகரும் ஒரே ஆங்கிள்ள இருக்கர இடமா கொஞ்சம் மெனகெட்டு தேடி புடிச்சு நின்னுகிட்டு அப்ப அப்ப அம்மணி கேட்கற " நல்லாருக்கா..? " கேள்விக்கு " இது கலர் சரி இல்லை.. இது அது நல்லா இல்லை.. இருக்கு.." இப்படி ramdom ஆ மாத்தி மாத்தி பதில் சொல்லிகிட்டே இருந்தீங்கனா போதும்.
என்னா சிங்கங்களே அசிங்கப்படாம ஜொள்ளுவுடுறது எப்படின்னு ஏதோ என்னோட சிற்றறிவுக்கு தெரிஞ்ச விசயத்தை சொல்லி இருக்கேன்.. அல்லாரும் சத்தம் காட்டாம படிச்சுபுட்டு practicals க்கு கெளம்புங்கப்பூ...
Saturday, October 09, 2010
எந்திரன் - கமலேநடித்திருந்தால்?
Wednesday, May 05, 2010
Modern Girls vs Ultra Modern Girls
டி சர்ட் போட்டுகிட்டு மங்களகரமா சுத்துவாங்க
Ultra Modern Girls
அதோ டிசர்டில கையை கிழிச்சுவுட்டுகிட்டு கையில்லாத பனியனோட பரிதாபமா உலாவருவாங்க
Modern Girls
லூசுமாதிரி லூசா ஒரு ஜீன்ஸ் போட்டுகிட்டு சுத்துவாங்க
Ultra Modern Girls
போட்டுகிட்டு தச்சாங்களோ இல்லை தச்சுகிட்டுதான் போட்டாங்களோன்னு கவலைய உண்டாகுற மாதிரி ஒரு ஜீன்ஸோட கலவரமா உலாவருவாக
Modern Girls
ஜீன்ஸ் டிசர்ட் போட்டுகிட்டு ஏதோ ‘ஹேர்பேண்டு’ எல்லாம் ஹேர்லதான் போட்டுக்கணுங்கர பழைமைவாதத்தில சடைபின்னி அதுல இந்த ‘ஹேர்பேண்டு’ போட்டுகிட்டு ‘தேமே’ ன்னு சுத்திகிட்டு இருப்பாக
Ultra Modern Girls
எங்க அவுக போட்டு இருக்குற டிசர்ட்டு ஜீன்சை ‘டச்’ பண்ணி டார்சர் கொடுத்துடுமோங்கற கவலையில ஜீன்ஸுக்கு பாதமகமில்லாம ஒரு டிசர்ட்டை போட்டுகிட்டு அப்படியே ஹேர்பேண்டு எல்லாம் கையில போடுறதுக்குதாங்கற வாழ்க்கைத் தெளிவோட தலைவிரிகோலமா கலவரமா சுத்திகிட்டு இருப்பாக !
Modern Girls
அதிகபட்சமா ‘short’ சுரிதார் போட்டுகிட்டு வாய பொளந்துகிட்டு பாகுறவுகளை ‘அற்பனே’ ன்னு ஒரு ‘லுக்’ வுட்டுகிட்டு சீனைப்போடுவாங்க.
Ultra Modern Girls
இவங்களும் ‘short’ சுடிதான் போடலாம்னு நெனச்சுகிட்டு உள்ள போடுற ‘ஸ்லிப்’பையே கலர் கலரா கொழந்தை மனசோட போட்டுகிட்டு வந்து பாகுறவுக மனசை தவழவச்சுடுவாங்க.
Modern Girls
முக்கா காலுக்கு ஒரு பாவாடைய போட்டுகிட்டு தேம்ஸுக்கு பக்கத்துலதான் என் வீடுங்கர ரேஞ்சுகு அலப்பறை வுடுவாங்க
Ultra Modern Girls
இவுக ‘கால்’ காலுக்கு கொஞ்சம் கீழ வரைக்கும் பாவாடைய போட்டுகிட்டு ஜெனிபர் லோபஸ் தங்கச்சி ரெஞ்சுக்கு சிலுப்பிகிட்டு இருப்பாக
Modern Girls
இவுக அப்படியே டக்கு டகுன்னு ஹைஹீல்சை போட்டுகிட்டு நடந்தா ஏரியாவே அதிர்ரும்ல ?
Ultra Modern Girls
இவுக ஏரியாவுகு வந்தாலே பால்குடி பாலகன் முதல் நாளைக்கு பால் ஊத்தபோற தாத்தா வரை பாக்குறவுக மனசெல்லாம் சும்மா அதிர்ரும்லே ??
என்ன கண்ணுகளா ஏதோ நம்மளால முடிஞ்ச அளவுக்கு வெளகத்தை அள்ளித்தெளிச்சுருக்கேன். மார்டன் பொண்ணுகளுக்கும் அல்ட்ரா மார்டன் பொண்ணுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிஞ்சுகிட்டு ஜென்ம சாபல்யம் அடைஞ்சுட்டிங்களா?? அப்படியே வந்து நம்ம ஆராய்ச்சிக்கு நிதி கொடுத்துட்டு போங்கப்பூ !!
சுறா - சம்பவாமி யுகே யுகே!
ஒரு ஊரில் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் ஏழைகள் இருந்தனர். அவர்கள் குடிசையில் இருந்தனர். ஏழைகளில் ஒரு ஏழைப்பங்களான் இருந்தான். மக்களுக்கு கக்கூஸ் வந்தாலும் அவன் துணை வேண்டும். அதே ஊரின் ஊரில் பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஹோட்டல் கட்ட இடம் கிடைக்காமல் குடிசைகளை அகற்ற வேண்டியிருந்தது. குடிசைக்கு தீ வைத்தான். நடுவில் காதலியோடு நாலு பாட்டு , அம்மாவோடு சென்டிமென்ட். மக்கள் கதறல் சோகம். ஏ.பங்களான் கோபப்பட்டான். வஞ்சகமாக பணக்காரனை ஏமாற்றி பணம் சம்பாதித்து ஏழைகளுக்கு கொடுத்தான். பின் மகிழ்ச்சியாக காதலியோடு டூயட் பாடினான். சுபம்.
ஜொள்LAW
ஜென் குரு ரேஞ்சுக்கு இல்லாட்டியும் நம்ம "ஜொள்" குரு கொஞ்சம் கோக்கு மாக்கான ஆளுதாங்ககோ....சொல்ற தத்துவம் புரிஞ்சா புரிஞ்சுக்குங்க... புரியாட்டியும் நீங்களே ஏதாசும் புரிஞ்சுக்குங்கப்பூ....
ஜொள்LAW #1
"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...
காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி..."
ஜொள்LAW #2
"காதலிக்கற பொண்ணையே கல்யாணம்
பண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது..
கல்யாணம் பண்ணினவன் எல்லாம்
பொண்டாட்டியத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியாது..."
ஜொள்LAW #3
"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது ஜொள்ளுடா...
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதல்டா...."
ஜொள்LAW #4
"பொண்டாட்டிய மட்டும் காதலிக்கனும்னு
நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கர எல்லாரையும் பொண்டாட்டியா
நெனக்கறது ஆம்பளை புத்தி..."
ஜொள்LAW #5
"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிஷ்டசாலி
கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."
ஜொள்LAW #6
"ஏன்னா அவ அழகுன்னு சொல்லறவன் லோக்கல் லவ்வர்..
ஏன்னா அவ என் காதலின்னு சொல்லறவன் True லவ்வர்..."
ஜொள்LAW #7
"காதலிய பொண்டாட்டி ஆக்க
முடியலைனா பொண்டாட்டிய
காதலி ஆக்கிக்குங்கப்பூ...."
ஜொள்LAW #8
"கல்யாணத்துல காதல் முடியலாம்... ஆனா
காதல் கல்யாணத்துலதான் முடியனும்னு இல்லை..."
ஜொள்LAW #9
"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்
ஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும்
சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..."
Sunday, April 25, 2010
இதெல்லாம் கண்டுக்க ஆள் தான் இல்ல.
கண்ணை மூடி கொண்டும் இல்லை ஒன்னரை கண்ணோடும் சொல்லலாம் அவர் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் முதிர்கண்ணன் என்று. ”இல்லைங்க நான் இங்க சும்மா ஒரு வருச காண்ட்ராக்ட்ல வந்தேன். இன்னும் மூனு மாசத்துல இந்தியா வந்திடுவேன். சென்னையில இருக்குற கம்பெனியில சேர்ந்திடுவேன்”னு கூசாம பொய் சொன்னாலும் “நீங்க இந்தியா வந்த பிறகே கால் பண்ணுங்க”ன்னு மனசாட்சியே இல்லாம போனை வச்சிடுறாங்க பெண்ணை பெத்தவங்க.
வெளிநாடு அதுவும் துபாய் மாப்பிள்ளைன்னா பின்னங்கால் முன்னங்கால் முட்டியை தொடுற அளவுக்கு ஓட்டமா ஓடுறாங்க பொண்ணு வீட்டுகாரங்க. கொஞ்ச நாள் முன்ன நண்பனுக்கு சென்னையிலிருந்து போன் செய்த ஒரு பெண்ணின் தாயார் எல்லாம் விசாரிச்சுட்டு, நீங்க இந்தியா வந்தா தான் பொண்ணு கொடுப்பேன்னு சொல்ல இவன் போன்லயே சூடாகி ”வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு வீட்டோட மாப்பிள்ளையா வரேன். காலம்புல்லா வச்சு சோறு போடுறீங்களான்”னு கேட்க அந்தம்மா டென்சனாகி போனை வச்சிருச்சு.
போட்டோ செஷனெல்லாம் முடிஞ்சு அப்பா அம்மாவுக்கு போட்டோவை அனுப்பின பின்னால போடுற கண்டிஷன் கொஞ்சம் டெரரா தான் இருக்கும். மாஸ்டர் டிகிரியோட பொண்ணு அழகா நச்சுன்னு இருக்கனும்னு மூனு வருசத்துக்கு முன்னால தேட தொடங்கினவங்க, மாஸ்டர் டிகிரி பேச்சுலராகி அழகு சுமாராகி, அப்புறம் நம்ம ஜாதியில ஏதோ பொண்ணு கிடைச்சா போதும்ன்ற நிலைமைக்கு மாறி இப்ப ஜாதியாவது மண்ணாங்கட்டியாவதுன்னு பெரியாரிஸ்டா(நன்றி சாரு) மாறிட்டானுங்க.
பெரியாரிஸ்டா எல்லா நேரத்திலேயும் இருந்தா பரவாயில்ல நம்ம சாரு மாதிரி சில நாள் அப்படி இருந்துட்டு பொண்ணு கிடைக்காத காரணத்தை சாமிகிட்ட கேட்க ஆரம்பிச்சிருவாங்க. ”டேய் மூனு வருசத்துக்கு முன்னால மேட்ரிமோனியல்ல இருந்த பொண்ணுங்க ப்ரொபலை எல்லாம் பார்த்து கிண்டல் பண்ணினோமே, அதோட பாவம் தான் இப்ப பொண்ணு கிடைக்க மாட்டேங்குதோ?” ன்னு நெத்தியில விபூதியை பூசிக்கிட்டு கேட்கும் போது தான் அவனவன் எவ்வளவு மன உளைச்சல் இருக்கான்னு தெரியுது. ஊருக்கு போகும் போது காளஸ்தியும், திருப்பதியில ஒரு கோவிலும், கும்பகோணத்துல சில பல கோவிலும்னு பல டூர் இருக்கும். இப்ப புதுசா ரம்பாவுக்கு காஞ்சி காமாட்சினால தான் கண்ணாலம் ஆச்சுன்னு எங்கேயோ படிச்சதால அதுவும் லிஸ்ட்ல சேர்ந்திருச்சு.
சரி மேட்ரிமோனியல், கல்யாணமாலையில இருக்குற பொண்ணுங்களாவது கொஞ்சம் இரக்க சுவாபம் இருக்கும்னு பார்த்தா படிச்சது பிஏ ஆனா வேலை பார்க்கிறது சாப்ட்வேர் கம்பெனியில, நாங்க அணுகுண்டு குடும்பம்(Nuclear family யாம்) , வர்ரவன் குடும்பமும் அணுகுண்டா இருக்கனும், மாப்பிள்ளை மாஸ்டர் டிகிரியோட சாப்ட்வேர் கம்பெனியில் இருத்தல் உச்சிதம், சிகரெட்டை தொட்டிருக்கவே கூடாது, பாட்டிலை பார்த்தக்கவே கூடாதுன்னு பல கண்டிசன் போட்டிருக்க, பயலும் கட்டிகிட்டா உன்னைய தான் கட்டிப்பேன்னு ஒரு மெசேஜ் விட, பொண்ணு ஜாதகம் மட்டும் கேட்டு ரிப்ளே அனுப்பினா போதும் “என் காதல் சொல்ல நேரமில்லை, உன் காதல் சொல்லத்தேவையில்லை”ன்னு காதலியா இவனே முடிவு பண்ணிடுவான். அது கடைசியில நீ துபாயை விட்டு வந்தா தான் என் கழுத்துல மூணு முடிச்சு போடனும்னு வந்து நிக்கும்.
முன்னெச்சரிக்கையா சண்டை போட்டு ஆபிஸ்ல வாங்கி வச்ச பேமிலி ஸ்டேடசு விசாவும், கல்யாணம் பண்ணினா தான் கிடைக்கும் இன்னும் சில பல சலுகைகளையும் வெட்டியா வெறிச்சு பார்த்துகிட்டே இருக்கும் போதே வருசம் ஓடிப்போகும்.
கொஞ்சம் கொஞ்சமா எட்டிப் பாக்குற வெள்ளை முடிய கூட சமாளிச்சிரலாம். ஆனா ஒரேடியா போற தலைமுடிய ஒன்னும் பண்ண முடியாம பசங்க கண்ணாடி முன்னாடி நிக்கிறதை பார்த்தா அழுகை முட்டிகிட்டு வரும். ஒரு இனத்தோட ஒட்டு மொத்த கதறல் அது. கட்டி பிடிச்சு அழமுடியாதபடி தொப்பை வேற இடிக்கும். துபாய்கு வந்த புதுசுல நித்தியானந்தா மாதிரி துள்ளி குதிச்சு எழுந்திருச்ச பையலுக எல்லாம் இப்ப எழுந்திருக்காம உட்கார்ந்த இடத்திலேயே எல்லா வேலையும் பார்க்குறதுக்கு இந்த தொப்பை முக்கிய காரணம்.
கள்ளி பாலை மட்டும் கண்டுபிடிக்காமலே இருந்திருந்தா எண்பதுகளில் எக்கசக்க பிகர்ஸ் சாகாம காப்பாத்தியிருக்கலாம்னு குடிபோதையில நண்பன் சமூக பொறுப்போட பொலம்பினப்ப அவனை தேத்த முடியாம நானும் குலுங்கி குலுங்கி அழ வேண்டியதா போச்சு :( எவ்வளவு பெரிய உண்மை? ஒரு தலைமுறையே இதுனால பாதிக்க பட்டு நிக்குது.
பத்தாவது வரைக்கும் படிச்ச வொர்க் ஷாப்ல வேலை செய்யிற மலையாளிங்க எல்லாம் ஊர்ல இருந்து பிஎஸ்சி நர்சிங்கோ, டீச்சர் டிரைனிங்கோ, அட்லீஸ் டிகிரி ஹோல்டர்ல அழகான பொண்ணுங்க கிடைச்சு கல்யாணம் பண்ணிகிட்டு வரும் போது தமிழ்நாட்டோட நிலைமையை நினைச்சு நொந்துக்க வேண்டியது தான்.
அதுவும் இப்ப நேர்முகத்தேர்வு ரேஞ்சுக்கு தான் எல்லாம் நடக்குது. நண்பரின் தந்தையை ஒரு பெண்ணோட தகப்பனார் அழைத்து பேசியிருக்கிறார். ”பையனுக்கு டேக் ஹோம் சம்பளம் எவ்வளவு? என்னென்ன லோன் வாங்கியிருக்கான்? எப்ப முடியும்? இப்ப இருக்குற வீடு சொந்த வீடா? நாங்க வரதட்சனையா கொடுக்குற பணத்தை என்ன பண்ணுவீங்க?”ன்னு அடுக்கடுக்கா கேள்வி கேட்க பையனோட அப்பா “ஆணியே புடுங்க வேணாம்”ன்னு கிளம்ப்பி வந்துட்டார். இன்னொருத்தனுக்கு கிட்டதட்ட அமெரிக்காவுல வேலை கிடைட்டிருச்சு. அதாவது பொண்ணு அமெரிக்கா இன்னும் கொஞ்ச நாள்ல போயிடுமாம். அப்பா அம்மாவும் போயிடுவாங்களாம். பொண்ணோட அண்ணன் அங்க தான் இருக்கானாம். இப்ப நீ வேலை பார்க்கிற ஃபீல்டுல அங்க நல்ல வேலை கிடைக்கும். அதுனால உன்னைய செலக்ட் பண்ணியிருக்கோம்னு சொல்ல.... பையன் சன் மியூஸிக்ல லைவ் டெலிசாய்ஸ்ல வேலை பார்த்து வயித்தை கழுவுனாலும் கழுவேனே தவிர உன் பொண்ணுக்கு புருசனா வேலை பார்க்க மாட்டேன் சொல்லிட்டான். ம்ம்ம் அது நடந்து ரெண்டு வருசம் ஆச்சு. இப்ப ஃபீல் பண்றான் ஒழுங்கா அந்த பொண்ணையே கண்ணாலம் கட்டியிருக்கலாம்னு.
இதுல சானியாவும், சோயப்பும் கல்யாணம் ஆகி துபாய் வந்து குடியேறப்போவதாக செய்தியை படிச்சதும் பல நண்பர்கள் கறுப்பு கொடியை சட்டையில் குத்திக்கொண்டு விமானநிலையத்திற்கு போகப்போவதாக முடிவு பண்ணிட்டாங்க. புதுசா எந்த கன்ஸ்ட்ரக்ஷன் வேலையும் நடக்காமல் கட்டி முடித்த கட்டடத்தையே இடிச்சுட்டு இருக்குறவங்களை தொறத்திட்டு இருக்குற இந்த நேரத்துல கறுப்புக்கொடிய காண்பிக்க போறதா சொன்னதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
பாக்கிஸ்தான்ல இருந்து ஒரு பையனுக்கு நம்ம சானிய கல்யாணம் பண்ணி வச்சு இன்னொரு நம்ம நாட்டு பையனுக்கு கிடைக்க இருந்த வாழ்க்கையில மண்ணள்ளி போட்டவன சும்மா விடலாமா?
இப்படி புலம்ப எக்கசக்க கதைகள் வளைகுடால இருக்குது. இதெல்லாம் கண்டுக்க ஆள் தான் இல்ல.
ஹி ஹி பை தி வே என்னோட ஃபைலை இன்னும் திறக்கவே இல்லை. இது முழுக்க முழுக்க நண்பர்களோட அனுபவம் தான். நமக்கு இன்னும் அந்த அளவுக்கு வயசாகல. நம்பாதவங்க என்னோட ப்ரொபைலை போய் பார்த்துக்கங்க
Friday, February 05, 2010
திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் ......
அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?
அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..
அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..
அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?
அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…
அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?
அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….
அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?
அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…
அவள் : என்னை அடிப்பீர்களா?
அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!
அவள் : நான் உங்களை நம்பலாமா?
அவன் : ம்ம்ம்.
அவள் : அன்பே…!
திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்
Monday, January 11, 2010
sms
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?தெரியலையா?அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!
டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!
பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!
அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?சரோஜா! ஏன் கேக்குற?அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?
பல்ப் - எடிசன்ரேடியோ - மார்கோனிபை-சைக்கிள் - மேக் மில்லன்போன் - க்ராஹாம் பெல்க்ராவிடி - நியூட்டன்கரண்ட் - பாரடேஎக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!! காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ பரவாயில்லை என்று!!
மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு!அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?
கொடூர மொக்கை!என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி...