Monday, February 23, 2009

நீ என் இதயத்தில்





எதற்க்காக உன் விலாசத்தை மறைகின்றாய்,
எங்கே நான் வந்து விடுவேனோ என்ற அச்சம் தானே?
பேதையே,
நீ என் இதயத்தில் வசிக்கும் போது,
நான் ஏன் உன் வீடு தேடி வர போகிறேன் ....

ஈரிதழ் ரோஜா

மெய் எழுத்துகள் எல்லாம்
உயிர் பெற்று விடுகின்றதுஈரிதழ் ரோஜா நீ
உச்சரித்திட.....

விழிகுளம்



வெகு நாட்களுக்கு
பிறகு சந்தித்துக்கொண்ட
" வீணையும் விரலும் " நாம் ?
அருகில் வந்தேன்
இதென்ன
இவள் விழிகுளம்
" மீனையும் காட்டுகிறது ------
தூண்டிலையும் நீட்டுகிறது " !

சுகமான சுமை

என் உயிரே
நீ எங்கிருந்தாலும்
என் மனதில்
நித்தம் நித்தம்உன்னை பற்றிய கனவுகள்தான்
சுகமான சுமையாக

கனவாக அல்ல

பிரிந்து போன உன்
நினைவுகள் ஒவ்வொரு நாளும்
என் கண்களுக்கு வந்து
கொண்டுதான் இருக்கின்றன
கனவாக அல்ல
கண்ணீராக.......

உன் மௌனங்கள்



உன் மௌனங்கள் தான் ,
என்னை பேச்சாளனாக்கியது.!
என்ன பயன்.?
உன் அருகில் வருகையில்,
ஊமையாகி விடுகிறேனே....!!

கண்ணீராக நான்



கண்களாக நீ
கண்ணீராக நான்
தெரியாமல் கூட
அழுது விடாதே
நான் உன்னை விட்டு
பிரிந்து விடுவேன்

விண்மீன்கள்



என்னவளின் முகத்துக்கும்
நிலவுக்கும்
வித்தியாசம் தெரியலையாம்
குழப்பத்தில்
சிதறிகிடக்கின்றன
விண்மீன்கள்
வானத்தில்!!

தவம்



உன் நெற்றிக்குகாக
ஆயிரம் நட்சத்திரங்கள்
தவம் கிடக்கின்றன
வானத்தில்
உன் நெற்றி பொட்டாக
வருவேன் என்று.................

எமனுக்கு



எமனுக்கு தான்
என் உயிரை
எடுக்கும் உரிமை
என்று நான்
நினைத்து இருந்தேன்
உன் கண்களை
பார்க்கும் முன்பு வரை!!

மழை



நீ என்ன மழை மேகமா
உன்னுள் சிதறி
கிடக்கின்ற
தண்ணீர் துளிகளை
ஒன்றாக்கி மழை
தருவது போல்
என்னுள் சிதறிக்கிடந்த
வார்த்தைகளை
ஒன்றாக்கி கவிதை
தந்தாயே......

காதணிகள்



உன் காதுகளும்
கதை சொல்லுமோ?
காதணிகள்
தலையசைக்கின்றனவே!

சுமங்கலி



சூடியவர்களை எல்லாம்
சுமங்கலி ஆக்கிவிட்டு
தான் மட்டும் எப்போதும்
விதவை கோலத்தில்....

நட்ப்பு



காதலும் நட்பும் சந்தித்து கொண்ட போது
காதல் கேட்டது
நான் வந்து விட்ட பின் நீ எதற்கு?
நட்பு சொன்னது
நீ விட்டு செல்லும் கண்ணீரை துடைக்க என்று...

இதயம்



உன்னை பார்க்கும் தருணங்களில்
என் இதழ்கள் மூடிகொள்கின்றன
இதயமோ ஒலியினை அதிகரித்தது
உள்ளிருந்து சத்தமிடுகிறது

நாள் கட்டி



தினமும் கிழிக்கும்
காலண்டர் சீட்டுகளை
பத்திரப்படுத்தி வைத்துளேன்
அவை அன்றன்று
உன்னுடன் நிகழ்ந்த
உரையாடல்களை
சுமந்திருந்தன என்பதற்காக

மொழி



உன் பெயரை தவிர
மொழியின் மற்ற எழுத்துகள்
என் பேனாவால் பெரும்பாலும்
தவறாகவே எழுதப்படுகின்றன

தனிமை



மாற்றங்கள் யாவும் காலத்தின்
கட்டாயமாம் - ஏன் தோழி
பருவங்கள் பல கடந்தும்
பசுமை மாறா உன்
நினைவுகளுடன் - நான் மட்டும்?

வலி



பெண்ணே,
இடது பக்கம்
சிந்தித்துப்பார் ஆண்களின்
வலி புரியும்.....

Sunday, February 22, 2009

நவநீ


யத்தனே நாய் ஓடினாலும் நான் யானை