Monday, August 17, 2009

கிசுகிசு .......

செட்களில் அருந்ததீயைப் பார்ப்பவர்கள் அரண்டு போய் விடுகின்றனராம். காரணம், கையில் தம்மும், வாயில் புகையுமாகத்தான் காணப்படுகிறாராம்.அடுத்தடுத்து பற்ற வைத்துக் கொண்டே இருக்கிறாராம். ஏன் இப்படி என்று கேட்டால், உடம்பைக் குறைக்கத்தான் என்கிறாராம்.இது உடம்பை உருக்குமே என்று குழப்பமாகி நின்றால், புகை பிடித்துக் கொண்டே இருந்தால் வயிறு மப்பாகி தொம் என்று இருக்கும். பசிக்காது. பசித்தால்தானே நாம் நிறைய சாப்பிட்டு உடம்பு பெறுக்கிறது. அதைத் தவிர்க்கத்தான் இப்படி ஒரு டிரிக் என்கிறாராம் வாயிலிருந்து சுருள் விட்டபடி..என்னா மாதிரியான சயின்டிபிக் திங்கிங்..!

===================================================================

ரம்லத்தை நேரில் சந்தித்த நயன்தாரா தன்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், விவாகரத்து போன்ற முடிவுக்கு அவசியமின்றி இருவரும் இணைந்து பிரபுதேவாவுடன் வாழலாம் என்றும் பேசியதாகக் கூறப்படுகிறது.வேறு வழியின்றி இந்த முடிவை அமைதியுடன் கேட்டுக் கொண்டாராம் ரம்லத். இந்த மவுனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்ட பிறகே பிரபுதேவாவை தன் துபாயிலிருக்கும் தன் அண்ணனிடம் அறிமுகப்படுத்தினாராம் நயன்.சமீபத்தில் ஒரு ஆங்கில இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் இதை ஒப்புக் கொண்டுள்ள நயன்தாரா, திருமணம் எப்போது அல்லது ஏற்கெனவே முடிந்துவிட்டதா என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் மழுப்பியுள்ளார். ஆனால் நிச்சயம் அனைவரையும் அழைத்து வெளிப்படையாக திருமணத்தை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் நயன்.ஆக... செட்டில்மெண்ட் ஆகிடுச்சின்னு சொல்லுங்க!

==============================================================

No comments:

Post a Comment