Thursday, September 03, 2009

sms ஜோக்ஸ்

1)அப்பா:ஏண்டா டெஸ்ட்டுல சீரோ மார்க் வாங்கியிருக்க?பையன்:அது சீரோ இல்லப்பா, நா நல்லா படிக்கிறேன்னு டீச்சர் ஓ போட்டுருக்காங்க...

2)லைஃப் போர் அடிக்குதா?Type: 'I love' your lover nameand send it to all your relativesமுயற்சி பண்ணிப் பாரு,அப்புறம் போர் அடிக்காது,ஊரே அடிக்கும்.

3)ஒரு அரக்கன் ஒரு அரக்கியோட கோவிலுக்குப் போனான்.ஆனா, கோவில் கதவ ஓபன் பண்ண முடியல,ஏன்?ஏன்னா, அவன் அரை+கீ யோடதான போனான், முழு கீயோட போகல.

4)ஒரு பொண்ணு வண்டி ஓட்டுறத எப்படி டெக்னிக்கலா சொல்லுவாங்க?.....’பெண் ட்ரைவ்’னு சொல்லுவாங்க.

5)கசப்பான அனுபவங்கள் இல்லையென்றால்,இனிப்பான வாழ்க்கையை நாம் உணர முடியாது......அதனால,உடனே 2 பாவைக்காய் வாங்கி சாப்பிடுங்க.

6)அந்த மூன்று வார்த்தை,அம்மா சொன்ன வார்த்தையை விடப் பெரியது,காதலி சொன்ன வார்த்தையை விடப் பெரியது......நண்பன் என்னிடம் சொன்ன வார்த்தை,’மச்சி நானும் பெயில்’.

7)எறும்புக்கும், கொசுவுக்கும் கல்யாணம்.முதலிரவு அன்னைக்கி, கொசு வெளிய உக்காந்து வேடிக்க பாத்துட்டு இருக்கு.அப்போ, கொசுவோட நண்பன் கேக்குது, ‘என்னடா மாப்ள, முதலிரவும் அதுவுமா வெளிய உக்காந்து என்னடா பண்ற?’அதுக்கு மாப்ள கொசு சொல்லுச்சாம்,‘சிரிக்கி மவ, உள்ள குட்நைட் போட்டு தூங்குறாடா மச்சான்.’

8)இதப் படிக்கிறவங்க முட்டாள்,படிக்காதவங்க லூசு,சேவ் பண்ணி வச்சா கிறுக்கு,டெலிட் பண்ணா கொரங்கு,சிரிச்சா மெண்டல்,கோவப்பட்டா நாயி,எனக்கு திரும்ப அனுப்புனா எருமமாடு,எனக்கு கால் பண்ண நெனச்சா கழுதை,எதுவுமே பண்ணலன்னா தண்டம்,இப்ப என்ன பண்ணுவ? இப்ப என்ன பண்ணுவ?

9)கணவன்:எனக்கு ஆபரேசன்ல ஏதாவது ஆயிட்டா, நீ டாக்டர கல்யாணம் பண்ணிக்கோ.மனைவி:ஏன் இப்படி சொல்றீங்க?கணவன்:எனக்கு அவர பழிவாங்க வேற வழி தெரியல...

10)நீதிபதி:எதுக்குப்பா அவன் பொண்டாட்டிய 11 மணிக்கு மேல கூப்பிட்ட?நம்மாளு:அவந்தான் சார் சொன்னான், என் பொண்டாட்டிய 11 மணிக்கு மேல கூப்பிடா 10 பைசான்னு.

No comments:

Post a Comment