Friday, September 23, 2011

மறக்க முடியாத கடிதம்


தனது பேரனைப் பாதுகாக்க வழியின்றி நகரத்திலுள்ள ஒரு பணக்கார வீடொன்றில் கொண்டுபோய்ச் சேர்க்கிறார் தாத்தா. அவர் தனது பேரனை விட்டுவிட்டு ஊர் திரும்பிய ஓரிரு நாட்களிலேயே சித்ரவதை செய்ய ஆரம்பிக்கிறது அப்பணக்காரக் குடும்பம். பல நாள் அடி, உதை, பட்டினிகளுக்குப் பிற்பாடு….எப்படியோ அவர்களது கண்களுக்குத் தப்பித்து கடிதம் ஒன்றினை எழுதுகிறான் அப்பேரன்:
“அன்புள்ள தாத்தாவுக்கு,
நீ விட்டுவிட்டுப் போன சில நாட்களிலேயே இங்குள்ளவர்கள் மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.
அவர்கள் தினந்தோறும் அடிப்பதையும், சூடு வைப்பதையும் என்னால் தாங்க முடியவில்லை.
நான் இன்றோடு சாப்பிட்டு மூன்று நாட்களாச்சு. எப்படியாவது உடனே வந்து
என்னை நமது கிராமத்துக்கே கூட்டிக் கொண்டு போய் விடு. மிக அவசரம்.”
என்று எழுதிவிட்டு பின்புறம் திருப்பித் தனது தாத்தாவின் முகவரியை எழுதுகிறான் அப்பேரன். இப்படியாக…..
பெறுநர்:
தாத்தா,
கிராமம்.

No comments:

Post a Comment